நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் நவராத்திரி வழிபாடு திங்கள்கிழமை தொடங்கியது.
இதனையொட்டி செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, மல்லிகை, முல்லை, அரளி, செவ்வந்தி, சம்மங்கி உள்ளிட்ட பல்வேறு பூக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி முதல் நாளில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.