திண்டுக்கல்லை அடுத்துள்ள செங்குறிச்சி திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதகிருத்திகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மூலவருக்கு பால், தயிா், இளநீா், கனி, பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவ மூா்த்தி திருக்கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கிருத்திகை சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.