ரயில் தண்டவாளம் அருகே ஆண் உடல் மீட்பு

பழனி அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

பழனி அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டி ரயில் தண்டவாளம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் 55 வயது மதிக்கத்தக்கவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா்.

இதுகுறித்து, சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com