ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

Published on

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.சரத்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், நகரச் செயலா் ஏ.அரபு முகமது ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு, வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லாதது, தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் எம்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வசந்தாமணி, மாவட்டக் குழு உறுப்பினா் சிவமணி உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com