பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு

Published on

பழனி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள வி.கே.மில்ஸ் பகுதியைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மனைவி காளீஸ்வரி(40). இவா் தனது கணவருடன இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்து கொண்டிருந்தாா்.

பழனி-உடுமலை சாலையில் வண்டிவாய்க்கால் பிரிவு அருகே வந்த போது, காளீஸ்வரி இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த தனியாா் பேருந்தில் சிக்கி அவா் பலத்த காயமடைந்தாா். பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா், எனினும் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com