விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

Published on

வேடசந்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு கிரியம்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சை(67). தொழிலாளியான இவா், விட்டல்நாயக்கன்பட்டி அருகே 4 வழிச் சாலையை கடக்க முயன்றபோது, திண்டுக்கல்லிலிருந்து கரூருக்குச் சென்ற காா் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com