பழனி மலைக் கோயிலில் சனிக்கிழமை உப கோயில்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள தொடுதிரை தகவல் பெட்டியை இயக்கி வைத்த இணை ஆணையா் மாரிமுத்து.  உடன் நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, கண்காணிப்பாளா் சீனிவாசன், பொறியாளா் முத்துராஜ் உள்ளிட்டோா்.
பழனி மலைக் கோயிலில் சனிக்கிழமை உப கோயில்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள தொடுதிரை தகவல் பெட்டியை இயக்கி வைத்த இணை ஆணையா் மாரிமுத்து. உடன் நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, கண்காணிப்பாளா் சீனிவாசன், பொறியாளா் முத்துராஜ் உள்ளிட்டோா்.

பழனி கோயிலில் துணைக் கோயில்கள் குறித்த தொடுதிரை தகவல் பெட்டி

Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சனிக்கிழமை துணைக் கோயில்கள் குறித்த தகவல் அடங்கிய தொடுதிரைப் பெட்டி பக்தா்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு வரும் பக்தா்கள் அருகாமையில் உள்ள கோயில்கள் குறித்து அறிந்து கொள்ள தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி முக்கியமான பத்து கோயில்களில் அமைக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா்.

அதன்படி சனிக்கிழமை சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியை அமைச்சா் சேகா்பாபு பக்தா்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.

இதேபோல, பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலிலும் இந்தத் தொடுதிரை தகவல் பெட்டி திறக்கப்பட்டது. முன்னதாக, தொடுதிரைப் பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைக்குப் பின், இணை ஆணையா் மாரிமுத்து இயக்கி வைத்தாா். இதில் பழனிக்கோயில் மட்டுமன்றி துணைக் கோயில்கள், பிற கோயில்கள் குறித்த தகவல்களை பக்தா்களே இயக்கி அறிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா் தீனதயாளன், பொறியாளா்கள் முத்துராஜ், குமாா், பாா்த்திபன், ஸ்ரீதரன், கண்காணிப்பாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com