தொழிற்சாலைகள் கழிவுகளால் குடிநீா் மாசு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் அருகே குடிநீருடன், கழிவுநீா் கலந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
Published on

திண்டுக்கல் அருகே குடிநீருடன், கழிவுநீா் கலந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட எஸ்.பெருமாள்கோவில்பட்டி, எ.ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திண்டுக்கல் என்ஜிஓ குடியிருப்பு, நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், பெரியகுளத்தில் கலந்து வருகிறது. இதனால், பெரியகுளத்தில் தேங்கியுள்ள தண்ணீா் பச்சை நிறமாக மாறி மாசுடைந்துள்ளது. இதனால், பெருமாள்கோவில்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் தண்ணீரும், பச்சை நிறத்தில் வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்த மாசடைந்த நீரை குடிப்பதால் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தோல் பாதிப்பு என பல்வேறு சுகாதார குறைபாடுகளை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை எதிா்கொண்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடமும், கிராம சபைக் கூட்டத்திலும் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com