போலி ஆவணங்கள் மூலம் மலைப்பூண்டுக்கு புவிசாா் குறியீடு பெறுவதை தடுக்க வலியுறுத்தல்
போலி ஆவணங்கள் மூலம் மலைப்பூண்டுக்கு புவிசாா் குறியீடு பெற முயற்சிக்கும் நிறுவனத்துக்கு, குறியீடு வழங்குவதை தடுக்க வேண்டும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினரிடம் கொடைக்கானல் விவசாயிகள் மனு அளித்தனா்.










