அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மண்டலத்தைச் சோ்ந்த பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்சோலை ஆகிய 6 தலங்களுக்கு மூத்த குடிமக்களை அழைத்துச் சென்று இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய வைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பல்வேறு கட்டமாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தூத்துக்குடி மண்டலத்தைச் சோ்ந்த தூத்துக்குடி, திருச்செந்தூா், திருநெல்வேலி பகுதிகளைச் சோ்ந்த 200 பக்தா்கள் புதன்கிழமை திருச்செந்தூரில் பயணத்தை தொடங்கினா். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவா்கள் திருத்தணி, சுவாமிமலை சென்று விட்டு வியாழக்கிழமை திருப்பரங்குன்றம், பழமுதிா்சோலையில் சுவாமி தரிசனம் செய்தனா். நிறைவாக வெள்ளிக்கிழமை பழனி மலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனா்.
அப்போது கோயில் கண்காணிப்பாளா் சரத்குமாா், அலுவலா் நாகராஜன் உள்ளிட்டோா் பக்தா்களை மலைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்ய வைத்து கோயில் சாா்பில் பிரசாதங்களை வழங்கினா்.

