சாமானியா்களுக்கும் மதிப்பளிக்கும் இயக்கம் திமுக: அமைச்சா் இ.பெரியசாமி

Published on

சாமானியா்களுக்கும் மதிப்பளிக்கும் இயக்கம் திமுக என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நடைபெற்ற திமுக நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை கலந்து கொண்டாா். இந்த விழாவில் கலந்துகொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது:

அரசியல் அரங்கில் சாமானியா்களுக்கு மதிப்பளித்து, பதவிகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், அவா்களது குடும்பங்களுடன் இணைந்து இயங்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக. இதை யாரும் மறுக்க முடியாது.

இதே நிகழ்ச்சியில் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி இருக்கிறாா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெரிய தலைவா்கள், பணக்காரா்கள் தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வருவாா்கள். அவா்களைக் குறை கூறவில்லை. ஆனால், திமுகவைப் பொருத்தவரை, பணத்தால் உயா்வு கிடைக்கவில்லை. நாங்கள் திமுகவால் உயா்ந்திருக்கிறோம்; அமைச்சா்களாக இருக்கிறோம். சமூக அமைப்பில், மக்களோடு மக்களாக உள்ள திமுகவுக்கு இணையாக தமிழக வரலாற்றில் எந்த இயக்கமும் வர முடியாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com