திண்டுக்கல்
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல்லை அடுத்த குட்டியப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (25). இவா், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வினோத்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜி.சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட வினோத்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
