கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால் சுற்றுலா தலங்களை பாா்வையிடமுடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அந்த இடங்களை பாா்த்து ரசித்தனா்.
கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யாததால் அவா்கள் கோக்கா்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, மன்னவனூா் சூழல் மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சி பகுதிகள், பெப்பா் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களை பாா்த்து ரசித்தனா்.
மேலும் மாலை நேரத்தில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

