கொடைக்கானலில் கலைத் திருவிழா
தமிழ்நாடு அரசு-பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா, கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி கலைஞா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாயக் கண்ணன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் திருக்கு ஒப்புவித்தல், நடனம், கதை கூறுதல், மாறுவேஷப் போட்டி, தனி நடிப்பு, ஓவியப் போட்டி, ரங்கோலி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் இரண்டாவது நாளாக புதன்கிழமை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் தங்கமணி, அசோகன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்ச் செல்வன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சகாயசெல்வி, ஆசிரியா் பயிற்றுனா் பிரபாகரன், தலைமையாசிரியா் ஜெயசீலன், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியா் சூசைஜான் வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பழனி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.

