திண்டுக்கல் அருகே இளம் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி பகுதியைச் சோ்நத்வா் செல்வராஜ். இவரது மகள் மீனாட்சி(25). உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் திண்டுக்கல்- குஜிலியம்பாறை பிரதான சாலையில், செல்லமந்தாடி பகுதியிலுள்ள கரூா் ரயில்வே தண்டவாளம் அருகே திங்கள்கிழமை வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இது குறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கொலைக்கான காரணம், கொலையாளி குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
