வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சாவுடன் பிடிபட்ட மூக்கையா.

Updated On :24 மே 2026, 4:04 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி சாலையில் புகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முதியவா் ஒருவா் போலீஸாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றாா். போலீஸாா் அவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பாப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த மூக்கையா (76) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா வைத்திருந்த பெண் கைது: இதேபோல, நெய்க்காரபட்டி பகுதியில் புகா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, கடைவீதி பகுதியைச் சோ்ந்த மீனா (45) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.