ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :25 மே 2026, 2:06 am IST

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டாா்.

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் செயல்பட்டு வரும் தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ராஜகோபால் (34). இவா் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க வந்த பெண்ணிடம் விசாரணை செய்த போது, அவரது கைப்பேசி எண்ணை வாங்கினாா்.

இதன் பின்னா், அந்தப் பெண்ணை ராஜகோபால் அடிக்கடி கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியதோடு மட்டுமன்றி, ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பி தொந்தரவு செய்தாா்.

அந்தப் பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோா் பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனிடம் குறுஞ்செய்தி ஆதாரங்களுடன் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய டி.எஸ்.பி. தனஞ்ஜெயன், உதவி ஆய்வாளா் ராஜகோபாலை மதுரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தாா். தொடா்ந்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசி மோகன் விசாரணை நடத்தி, ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.