கத்தாரில் உள்ள இந்தியர்களை மீட்க பிரதமருக்கு மின் அஞ்சல்: வைகோ

கத்தாரில் உள்ள இந்தியர்களை மீட்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
Published on
Updated on
1 min read

கத்தாரில் உள்ள இந்தியர்களை மீட்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
 மதுரையிலிருந்து புதன்கிழமை சென்னை செல்ல வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
 பாஜகவைச் சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடத் தடை இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால் மத்திய அரசு விற்பனைக்கு தடை எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது விவசாயிகளை நேரடியாக பாதிக்கும்.  தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கத்தாரில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு நிலவும் அசாதாரண சூழலில் அவர்கள் இந்தியா திரும்ப அதிக பணம் செலவாகும். எனவே, அவர்களை இந்தியாவிற்கு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மின் அஞ்சலில் கோரிக்கை விடுத்துள்ளேன்.      
 கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது தவறானது. கண்டனத்துக் குரியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com