மதுரை அருகே சாலையில் நாய் குறுக்கே சென்றதால், இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அருகே ஒத்தக்கடை நரசிங்கம் பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). ஒத்தக்கடையில் உள்ள எவர்சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டறையில் பணி முடிந்ததை அடுத்து, ஒத்தக்கடையில் இருந்து கடச்சனேந்தலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நரசிங்கம் கண்மாய் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் சென்றுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார்த்திக், சாலையோர மரத்தின் மீது மோதி பலத்த காயமடைந்தார். உடனே, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். கார்த்திக்கின் உறவினர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.