இடி தாக்கியதில் விவசாயி சாவு

மதுரை அருகே  செக்கானூரணி மாயாண்டிபட்டியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது தோட்டத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த
Updated on
1 min read

மதுரை அருகே  செக்கானூரணி மாயாண்டிபட்டியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது தோட்டத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னாங்கன் (35), அவருடைய மனைவி பாண்டியம்மாள் (32), தேங்கல் நகரைச் சேர்ந்த ராசுதேவர் மனைவி சோங்கம்மாள், அவரது மருமகள் செல்வி ஆகியோர் புதன்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப் பகுதியில் லேசான மழை பெய்தது. மின்னல் தாக்கியதில்  பொன்னாங்கன் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனர். அவர்களை, அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பொன்னாங்கன் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com