திருநகர் பாண்டியன் நகரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருட திட்டமிட்ட இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருநகர் பாண்டியன் நகர் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை இரண்டு நபர்கள் திருடிவிட்டு தப்பி ஓட முயன்றனராம். அப்போது, அங்கிருந்த தனியார் நிறுவனக் காவலாளிகள் இருவரையும் பிடித்து, திருநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த அஜித் (24), கம்பம் பகுதியைச் சேர்ந்த குமார் (27) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் பாண்டியன் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் திருட திட்டமிட்டு வந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.