மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை

மதுரையில் புதன்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
Updated on
1 min read

மதுரையில் புதன்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
   புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (28). ஆட்டோ ஓட்டுநரான இவர், சக நண்பரின் ஆட்டோவில் ஏறி மாட்டுத் தாவணிக்கு சென்றுள்ளார். அங்கு மற்ற பயணிகள் இறங்கிய நிலையில், சிலர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். அவர்கள் திடீரென ஆட்டோவில் இருந்த நந்தகுமாரை வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த நந்தகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நந்தகுமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
   இது குறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நந்தகுமார் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கூறினர்.  இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com