ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்க மதுரை சென்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, மீண்டும் பூப்பல்லக்கில் புதன்கிழமை இரவு திருப்பரங்குன்றம் வந்தடைந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற ஆவணி மூல திருவிழாவின் முக்கிய விழாவான பிட்டுத் திருவிழாவில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பாண்டிய மன்னனாக பங்கேற்றார்.
இதற்காக, சுவாமி தெய்வானையுடன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி மதுரைக்கு புறப்பாடானார். 2 ஆம் தேதி நடைபெற்ற பிட்டுத் திருவிழாவில் பங்கேற்ற சுவாமி, தெய்வானையுடன் தினமும் மதுரை ஆவணி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதன்கிழமை மாலை, மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் சுவாமி புறப்பட்டு, மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பைகாரா வழியாக திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைந்தார்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் வழிநெடுகிலும் திருக்கண் அமைத்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.