மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சின்மயா மிஷனின் சார்பில் 20 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பகவத்கீதை ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை சின்மயா மிஷன் சார்பில் எல்.கே.ஜி. முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பகவத் கீதை ஒப்பித்தல் போட்டியின் முதல் சுற்று கடந்த சில நாள்களுக்கு முன்பு 38 பள்ளிகளில் நடைபெற்றன. ஐந்து பிரிவாக நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை வகித்த 500 பேருக்கான இறுதிச் சுற்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா தலைமை வகித்தார். மதுரை கனரா வங்கி பொதுமேலாளர் பரமசிவம் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தொழிலதிபர் பரத்கிருஷ்ண சங்கர் சிறப்புரையாற்றினார். இரு பிரிவுகளாக நடந்த போட்டியின் இறுதியில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒவ்வொரு சுற்றிலும் தேர்வான 3 பேருக்கு தங்க நாணயங்களும், 33 பேருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரமும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள்கள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி எல்.ரெங்கராஜன் தலைமை வகித்தார். லட்சுமி விலாஸ் வங்கி துணைத்தலைவர் ஆர்.தாமோதரன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிகளுக்கு நடுவர்களாக தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வாசுதேவன், பத்மலட்சுமி சீதாராமன், கீதாபாரதி, சங்கரன் ஆகியோர் இருந்தனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் சின்மயாமிஷன் செயலர் கோபால்சாமி, துணைத் தலைவர் திலகர், உறுப்பினர் திருமலையப்பன், சேதுபதி பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.கோபாலகிருஷ்ணன், உதவித்தலைமை ஆசிரியர் நாராயணன், ஆயுர்வேத வைத்தியசாலை ராகவவாரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக குககுமாரி வரவேற்றார். சின்மயா மிஷன் உறுப்பினர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்வி, மத போதனைகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல் கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
போலி நகைகளைக் கொடுத்து வங்கியில் மோசடி செய்ய முயற்சி: இருவா் கைது

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை. மாணவா் சோ்க்கை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
