தனியார் நிறுவனத்தில் நிதி மோசடி செய்த ஊழியர்கள் 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அழகர்கோவில் சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வீட்டு உபயோகப் பொருள்களுக்கு நிதியுதவி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம், மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த தினேஷ், குலமங்கலத்தைச் சேர்ந்த மருதுபாண்டி, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் மூவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து, நிறுவனக் கணக்கில் முறைகேடு செய்து ரூ.1.50 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இது குறித்து கேட்டபோது, மூவரும் சேர்ந்து ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், 3 பேர் மீதும் தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.