ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை சிறப்பு ரயில் (06053) இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேசுவரம்- சென்னை எழும்பூர் இடையே சனிக்கிழமை (நவ. 10) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45-க்கு சென்னை எழும்பூர் சென்றுசேரும்.
இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டி, குளிரூட்டப்பட்ட 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி ஒன்று, குளிரூட்டப்பட்ட 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இரண்டு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி 8 மற்றும் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 4 இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை , கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்கும்.