ராமேசுவரம்-சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்

ராமேசுவரத்தில் இருந்து  சென்னைக்கு சனிக்கிழமை சிறப்பு ரயில் (06053) இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து  சென்னைக்கு சனிக்கிழமை சிறப்பு ரயில் (06053) இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேசுவரம்- சென்னை எழும்பூர் இடையே சனிக்கிழமை (நவ. 10)  சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45-க்கு சென்னை எழும்பூர் சென்றுசேரும்.
 இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டி,   குளிரூட்டப்பட்ட  2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி ஒன்று,  குளிரூட்டப்பட்ட 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இரண்டு,  இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி 8 மற்றும்  இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 4  இணைக்கப்பட்டிருக்கும். 
  இந்த ரயில் மண்டபம்,  ராமநாதபுரம்,  மானாமதுரை,  மதுரை , கொடைக்கானல் ரோடு,  திண்டுக்கல்,  திருச்சி,  விருத்தாசலம்,  விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com