திருமங்கலம் பகுதியில் வெவ்வேறு பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்து 25 பவுன் நகையை மீட்டனர்.
திருமங்கலம் தாலுகா போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த நாகையா மகன் செந்தில்குமார்(30)என்பவரை விசாரித்தபோது அவர் திருமங்கலம் தாலுகா மற்றும் ஆஸ்டின்பட்டி பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸார்கைது செய்து,அவரிடமிருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இதேபோல, சிந்துபட்டி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது,திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த திருச்செல்வம்(44) என்பவரை சந்தேகித்து விசாரித்தனர். அப்போது அவர்கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து 15 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.