மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அமமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலர் மகேந்திரன் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் அயன்பாப்பாகுடி பகுதியில் தனியார் இடத்தில் எங்கள் கட்சி சார்பில் அக்டோபர் 28-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்கு கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமை வகிக்கிறார். எனவே பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கவும், உரிய போலீஸ் பாதுகாப்பு தரவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, டி.டி.வி. தினகரன் பொதுகூட்டத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.