• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

கோ.புதூரில் நூலகக் கட்டட பணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கோரிக்கை

By DIN  |   Published on : 12th September 2018 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

மதுரை கோ.புதூரில் நூலகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வாசகர் வட்டத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுதொடர்பாக வாசகர் வட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாண்டிதுரை ஆகியோர், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து, அவர்கள் கூறியது:
  மதுரை கோ.புதூரில் உள்ள கிளை நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் சொந்த கட்டடம் கட்டுவதற்கு, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து கோ.புதூர் பகுதியில் 910 சதுர அடி நிலத்தை கிளை நூலகம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கி, 2016 டிசம்பர் 8-இல்  அப்போதைய  மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.
  அந்த உத்தரவில் 2 ஆண்டுகளுக்குள் மேற்படி நிலத்தில் நூலகக் கட்டடம் கட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், வருவாய்த் துறை மீண்டும் நிலத்தை தன்வசம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  மேற்படி கிளை நூலகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டுமானப் பணியைத் தொடங்க நிர்வாக அனுமதி கோரி நூலகத்துறை இயக்குநருக்கு,  மதுரை மாவட்ட நூலக அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். 
 கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,  நிர்வாக அனுமதி கிடைத்தால் மட்டுமே பொதுப்பணித் துறை மூலமாக மதிப்பீடு, வரைபட அனுமதிக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், நிர்வாக அனுமதி அளிக்க தாமதம் ஆவதால், நூலகத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்ட உத்தரவு காலாவதியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, நூலகக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தரவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்