மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலர் எம்.மணிமாறன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலரும், கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான பி.மூர்த்தி கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பகுதி செயலர் கிருஷ்ணபாண்டியன் வரவேற்றார்.
ஒன்றிய செயலர் ஈஸ்வரன், மாவட்ட பிரதிநிதி உசிலை சிவா, இளைஞரணி அமைப்பாளர் விமல், வட்ட செயலர்கள் எம்.ஆர்.பி.ஆறுமுகம், ஸ்ரீதர், சாமிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.