மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டியில் கர்ப்பிணி பெண்கள் 365 பேருக்கு சமுதாய வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலூர் ஒன்றியத்தில் 195 பேருக்கு வண்ணான்பாறைப்பட்டியிலும் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 170 பேருக்கு கொட்டாம்பட்டியிலும் வளைகாப்பு நடத்தப்பட்டது. சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை மேலூர் சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் நடத்தி வைத்தார்.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் நூருல்அனிஷா (மேலூர்), ரதிதேவி (கொட்டாம்பட்டி) மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் மேலூர், கொட்டாம்பட்டி பகுதி அதிமுக நிர்வாகிகள் பொன்னுச்சாமி, வெற்றிச்செழியன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.