திருப்பாலையில் புதன்கிழமை (ஏப்.3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பாலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட காலேஜ் பீடர் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஏப்.3) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை யாதவா கல்லூரி, பொறியாளர் நகர், மேனேந்தல், விஜய் நகர், சண்முகா நகர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் கே.புதூர் வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி தெரிவித்துள்ளார்.