வேன் மோதி குழந்தை சாவு

திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை வேன் மோதி குழந்தை உயிரிழந்தது.

திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை வேன் மோதி குழந்தை உயிரிழந்தது.
திருமங்கலம் அருகே கூடக்கோயில் மேலஉப்பிலிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மகன் ஹரிஹரசுதன்(3). குழந்தையை இவரது பாட்டி காஞ்சிராகுளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் மேலஉப்பிலிக்குண்டு வந்தாராம். வேனில் வந்த அவர் குழந்தையை முதலில் இறக்கிவிட்டு விட்டு பின்பு அவர் இறங்கினாராம். கீழே இறங்கிய குழந்தை வேனின் முன் பகுதிக்கு சென்றுவிட்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் வேனை கிளப்பியுள்ளார். இதில் வேன் குழந்தையின் மீது மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து கூடக்கோயில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com