மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு: ஏஐடியுசி தீர்மானம்

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பது என்று ஏஐடியுசி கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பது என்று ஏஐடியுசி கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஏஐடியுசி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.முருகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலர் டி.எம்.மூர்த்தி பங்கேற்றார். மாவட்டச் செயலர் நந்தாசிங் மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரிப்பது. திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதியாக ரூ.1 லட்சம் திரட்டுவது, தேர்தல் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் என்.ஜோதிராமலிங்கம்,  இரா.முருகன்,  மீனவர் சங்கப் பொறுப்பாளர் போதும்பொண்ணு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com