மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என திருச்சபைகள் கட்டாயப்படுத்தக் கூடாது என மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை தலைவர் டேனியல் மதி கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:
தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல நன்மைகளை செய்துள்ளார். அவ்வழியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
திருச்சபைகள் குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறக் கூடாது. கிறிஸ்தவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.