மதுரை அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன்(30). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதேபகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எம்.சத்திரப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு மதுரை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.