குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

மதுரை அருகே நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர்


மதுரை அருகே நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது  மகன்கள் அர்ஜூன் மற்றும் சிவன் (18).  சித்திரைத் திருவிழாவைக் காண தனது நண்பர்களுடன் சென்ற சிவன், மதுரை அருகே பாண்டியன்கோட்டை பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கிய சிவனை காப்பாற்ற நண்பர்கள் முயற்சித்துள்ளனர். 
ஆனால், எந்த பலனும் கிடைக்காததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற  தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர், சிவனின் சடலத்தை மீட்டனர். இது குறித்து கருப்பாயூரணி போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com