கந்தன் கோயில் சித்திரை திருவிழா:காய்,கனிகள் செலுத்தி வழிபாடு
By DIN | Published On : 23rd April 2019 07:35 AM | Last Updated : 23rd April 2019 07:35 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் , பாலமேடு அருகே கல்லுமலை கந்தன் கோயில் சித்திரை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.
பாலமேடு அருகே சாத்தியார் அணை வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வைகாசிபட்டி, கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் விநாயகர், கந்தன், ராமலிங்க சுவாமிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
சித்திரைத் திருவிழாவில் பங்கேற்றப் பக்தர்கள், விவசாயம் சிறப்பாக நடைபெறவும், அதிக மகசூல் கிடைக்கவும், இந்தாண்டு போதிய மழை பெய்து சாத்தியார் அணை நிரம்ப வேண்டும் என பிரார்த்தனைச் செய்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சுவாமிக்கு காணிக்கைச் செலுத்தினர்.
மதுரை மட்டுமின்றி வெளி மாவட்ட மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துக் கொண்டனர், அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.