வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்ற வட்டாட்சியர் மீதான பணியிடை நீக்க உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாநகர் கிளை தலைவர் கே.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையானது கட்சிப் பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நினைத்தாலும் அந்த அறையைத் திறக்க இயலாது.
இந்நிலையில், வட்டாட்சியர் சென்றது வாக்குப்பதிவு தொடர்பான இதர ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குத் தான். இதை அறிந்திருந்தும் பிரச்னை பெரிதாக்கப்பட்டு, வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உண்மையை தெளிவுபடுத்தத் தவறியதோடு, பணியிடை நீக்கமும் செய்துள்ளார். ஆகவே, பணியிடை நீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.