மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பில் குருதிக் கொடையாளர்களுக்கான இணையதளம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தென்தமிழகத்தில் உள்ள குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் இந்த இணையதளம் (www.bharathablood.in) அமைக்கப்பட்டுள்ளது. குருதிக் கொடையாளர்கள் மற்றும் ரத்தம் தேவைப்படுவோர் பயன்படுத்தும் வகையில் இந்த இணையதளம் செயல்படும். பல்வேறு இடங்களிலும் நடைபெறும் ரத்த தான முகாம்கள், ரத்த வங்கிகள், குருதிக் கொடையாளர்களின் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்னிந்திய அமைப்பாளர் கோ.ஸ்தாணுமாலையன் இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். கேசவ சேவா கேந்திரத்தின் அறங்காவலர்கள் க. சந்திரன், க.சேகர், ஹரிபாபு, நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.