எஸ்விஎன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 09th August 2019 09:28 AM | Last Updated : 09th August 2019 09:28 AM | அ+அ அ- |

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 65 மாணவ, மாணவியர் ஏர்டெல் நிறுவனத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பாக பகுதி மற்றும் முழு நேர வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தினர் இதில் பங்கேற்றனர்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஏ.ஜவஹர், சுயநிதிப்பிரிவு இயக்குநர் பி.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் பாலாஜி பங்கேற்று வேலை வாய்ப்பின் முக்கியத்துவம், ஏர்டெல் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகள் குறித்து விரிவுரையாற்றினார்.
முகாமில் 585 மாணவ, மாணவியர் பங்கேற்றதில் 65 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முன்னதாக கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மைய இயக்குநர் ஜெசீலா பிரான்சிஸ் வரவேற்றார்.