மதுரையில், திங்கள்கிழமை முகமூடி கொள்ளயர்களிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்ற முயன்ற நாயை கும்பல் வெட்டிக் கொன்றது.
மதுரை ஹெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த செந்தில் மனைவி தமிழ்செல்வி(35). இவர் வீட்டின் அருகே இந்திரா நகரில் அப்பளம் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அப்பள நிறுவனத்திற்கு முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க வந்தது. அப்போது அங்கு பணியாற்றிய முத்துக்குமார் மற்றும் ரோமி ஆகியோரை தாக்கி உள்ளனர். தகவலறிந்து செந்தில் மற்றும் தமிழ்செல்வி ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். அந்த கும்பல் தம்பதியர் இருவரையும் தாக்கத் தொடங்கினர்.
இதை பார்த்த அவர்களது நாய் முகமூடி கும்பலை பாய்ந்து கடித்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் நாயை குத்திக் கொன்றுவிட்டு, தமிழ்செல்வியையும் தாக்கி விட்டு தப்பிச்
சென்றது.
இது குறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் பேரில் ஜெயஹிந்துபுரம் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, இதில் விஜய் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.