மதுரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடந்து சென்ற இளைஞரை மர்ம நபர்கள் 2 பேர்வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அதே பகுதியில் உணவு வாங்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் 2 பேர் மணிகண்டனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்குப் போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் கொண்டு செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.