மதுரை அருகே கார் ஓட்டுநர் குத்திக் கொலை

மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே கார் ஓட்டுநரை புதன்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே கார் ஓட்டுநரை புதன்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே உள்ள கச்சிராயிருப்பைச் சேர்ந்தவர் விஜயன்(30). வாடகைக்கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பாண்டி. இருவருக்கும் இடையே இருசக்கர வாகனம் நிறுத்துவதில் புதன்கிழமை காலை தகராறு ஏற்பட்டு அப்பகுதியினர் விலக்கி விட்டுள்ளனர். 
இந்நிலையில் புதன்கிழமை இரவில் மதுபோதையில் வந்த பாண்டி, விஜயனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பாண்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் தொடர்பாக காடுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாண்டியைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com