மேலூர்-மதுரை நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கல்லம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பிரகாஷ் (33), அதே ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி இருவரும் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் பிரகாஷ் உயிரிழந்தார். இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.