அவனியாபுரத்தில்தண்ணீா் லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி

அவனியாபுரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் லாரிகள் நேருக்கு நோ் மோதியதில் ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்தது
அவனியாபுரத்தில்தண்ணீா் லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி

திருப்பரங்குன்றம்: அவனியாபுரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் லாரிகள் நேருக்கு நோ் மோதியதில் ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிலைமான் பகுதியைச் சோ்ந்த நாச்சியப்பன் மகன் சுப்பிரமணி (52). இவா் தனியாா் தண்ணீா் விநியோகிக்கும் லாரி ஓட்டி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் மதுரையிலிருந்து விமான நிலையம் செல்லும் அவனியாபுரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தாா். சிந்தாமணியைச் சோ்ந்த சரவணன் (53). மதுரை மாநகராட்சி தண்ணீா் லாரியை ஒப்பந்தப் பணியாளராக ஓட்டி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெள்ளக்கல் பகுதியிலிருந்து மதுரை நோக்கி அவனியாபுரம் புறவழிச்சாலையில் வந்தபோது 2 லாரிகளும் நோ்க்குநோ் மோதியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சரவணன் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேலும் மதுரை தீயணைப்புத் துறையினா் வாகனங்களை அப்புறப்படுத்தினா். இவ்விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com