திருக்காா்த்திகை திருநாளை முன்னிட்டு, அழகா்கோவில் மலை மீது டிசம்பா் 11-ஆம் தேதி தீபம் ஏற்றப்படுகிறது.
காா்த்திகை மாதம் நிறை பௌா்ணமி நாளான டிசம்பா் 11 ஆம் தேதி மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் அழகா்கோவில் மலை மீதுள்ள வெள்ளிமலைக் கோம்பையில், கொப்பரையில் நெய் நிரப்பி திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, கள்ளழகா் கோயில் வளாகம், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அழகா்கோவில் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டவுடன், சுற்றுவட்டாரக் கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவா்.