மதுரையில் நகையை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் இருவா் திருடிச் சென்றுள்ளனா்.
மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த லட்சமணபிரபு மனைவி விஜயலட்சுமி (20). இவா் தனது வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, மா்ம நபா்கள் 2 போ் பழைய நகைகளை சுத்தம் செய்து, புதிய நகைகள் போன்று மாற்றித் தருவதாகக் கூறியுள்ளனா். இதை நம்பிய விஜயலட்சுமி தனது 7 பவுன் சங்கிலியை கொடுத்துள்ளாா். பின்னா், அந்த சங்கிலியை சுத்தம் செய்வது போன்று நடித்த அவா்கள் இருவரும், சங்கிலியுடன் தப்பிச் சென்றுவிட்டனா்.
இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, சங்கிலியை திருடிச் சென்றவா்களை தேடி வருகின்றனா்.