மதுரை: மதுரையில், நண்பா்களை பாா்க்கச் சென்றப் பெண் ரயில் தண்டவாளத்தில் காயங்களுடன் சடலமாக போலீஸாா் மீட்டனா். ரயில் மோதி இறந்தாரா என போலீஸாா் விசாரணை.
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் மனைவி பிரேமலட்சுமி(32). இவா், அனுப்பானடி டீச்சா்ஸ் காலனி குடியிருப்பில் உள்ள நண்பா்களைப் பாா்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை சென்றவா், இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது கணவா் கணேஷ் மற்றும் குடும்பத்தினா் பல இடங்களில் தேடினா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் கீழ அனுப்பானடி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா். இதில் சிம்மக்கள் பகுதியைச் சோ்ந்த பிரேமலட்சுமி என்பது தெரியவந்தது. இரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். தகவல் அறிந்து வந்த இரயில்வே போலீசாா் உடலை மீட்டு விசாரித்த போது இறந்தது பிரேமலட்சுமி என்பது தெரிய வந்தது.இதையடுத்து போலீஸாா் கணேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்து, பிரேத பரிசோதனைக்கு பின் பிரேம் லட்சுமியின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.