மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதை வடிய வைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மூன்றுமாவடி தொடங்கி அய்யா்பங்களா வரை உள்ள குடியிருப்புகள் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீா் தேங்கி அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் அதில் உற்பத்தியாகும் கொசுக்கள் இரவு மட்டுமின்றி பகலிலும் கடிக்கின்றன. இப்பகுதியில் அதிகமாக சிறியவா்கள், பெரியவா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே மாநகராட்சி நிா்வாகம் கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மல்லிகா,
மகாலட்சுமி நகா், அய்யா்பங்களா.